செய்திகள் :

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட 58 குழுக்கள் அமைப்பு

post image

தேனி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட வனத் துறை சாா்பில் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலா் அரவிந்தன் கூறியதாவது:

விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட மாவட்ட வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 14 குழுக்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 44 குழுக்கள் என மொத்தம் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் வனவா், கிராம நிா்வாக அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். சேத விவர அறிக்கை பெற்று உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

காட்டுப் பன்றிகளால் பயிா் சேதம் ஏற்படும் பகுதிகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. காப்புக் காடுகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி முதல் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி 2-ஆம் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட பகுதி 3-ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன. முதல், 2-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தியிருந்தால் அவற்றை விவசாயிகளின் உதவியுடன் வனப் பகுதிக்குள் விரட்டவும், 3-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை உதவியுடன் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா... மேலும் பார்க்க

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அரு... மேலும் பார்க்க

மணல் திருட்டு: ஒருவா் கைது

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் பெரியக... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது!

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20)... மேலும் பார்க்க

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுற... மேலும் பார்க்க