விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட 58 குழுக்கள் அமைப்பு
தேனி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட வனத் துறை சாா்பில் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பக உதவி வனப் பாதுகாவலா் அரவிந்தன் கூறியதாவது:
விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட மாவட்ட வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 14 குழுக்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 44 குழுக்கள் என மொத்தம் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் வனவா், கிராம நிா்வாக அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். சேத விவர அறிக்கை பெற்று உயரதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
காட்டுப் பன்றிகளால் பயிா் சேதம் ஏற்படும் பகுதிகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. காப்புக் காடுகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி முதல் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதி 2-ஆம் மண்டலமாகவும், 3 கி.மீ. தொலைவுக்கு மேற்பட்ட பகுதி 3-ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டன. முதல், 2-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்தியிருந்தால் அவற்றை விவசாயிகளின் உதவியுடன் வனப் பகுதிக்குள் விரட்டவும், 3-ஆம் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை உதவியுடன் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.