செய்திகள் :

காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு விரைவில் களமிறங்கும் வனக் குழு - மாவட்ட வன அலுவலா்

post image

காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவதற்கு வனத் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான நடவடிக்கையில் வனக் குழுவினா் களமிறக்கப்படுவாா்கள் என வன அலுவலா் பு.த.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், மலைப் பகுதிகள் மட்டுமின்றி, சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த சமவெளிப் பகுதியிலும் காட்டுப் பன்றிகளின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், இதனால், கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட வன அலுவலா் பு.த.ராஜ்குமாா் பேசியதாவது:

காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு வனத் துறையினருக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிறைவடைந்தவுடன், வனத் துறை, கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சிச் செயலா், விவசாயிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வனப் பகுதியிலிருந்து 3 கி.மீ தொலைவுக்குள் உள்ள காட்டுப் பன்றிகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டவும், 3 கி.மீ. வெளியிலுள்ள காட்டுப் பன்றிகளை சுடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, வத்தலகுண்டு வனச் சரகங்களில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் வகையில், பட்டா நிலங்களில் மின்சார வேலி அமைக்க 35 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. உரிமம் கோரி 235 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டபோதிலும், தாழ்வாக மின்சாரம் செல்லும் இடங்கள் என கண்டறியப்பட்ட 180 மனுக்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

மின் வேலிகளில் பொருத்தப்படும் ஒலிப்பான்கள், முறையாக வேலை செய்வதில்லை. இதனால், விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிா்ப்பதற்கு தொழில்நுட்ப யுத்திகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். வனத் துறை சாா்பில், 3 வனச் சரகங்களிலும் சூரிய சக்தி மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, அழகா்கோயில், நத்தம், அய்யலூா் வனச் சரகங்களில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2.5 மடங்கு காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. காட்டுமாடுகளின் தேவைக்காக வனப் பகுதியில் கசிவுநீா் குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும், சூரிய சக்தியில் இயங்கும் மோட்டாா்களும் பொருத்தப்படும் என்றாா் அவா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க