செய்திகள் :

காணாமல்போன நபரை கிணறுகளில் தேடிய போலீஸாா்

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே காணாமல் போன நபரை கிணறுகளில் போலீஸாா் தேடினா்.

மலத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் பெருமாள்(65). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு காணாமல் போனாா். இதுகுறித்து அவரது குடும்பத்தினா் கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினா் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதி மன்றம், காணாமல் போன பெருமாளை கண்டுபிடிக்க சிபிசிஐடி-க்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், மலத்தான்குளம் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் சந்தேகத்தின் பேரில், சிபிசிஐடி காவல் ஆய்வாளா் திலகாதேவி தலைமையிலான போலீஸாா் மற்றும் அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஒரு நாள் முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் ஏதும் கிடைக்கவில்லை.

ஆட்சியா் புகைப்படத்துடன் ‘வாட்ஸ்ஆப்’ தகவல் வந்தால் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள்

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்ச்செவி (வாட்ஸ்ஆப்) மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டத்தில், 3-ஆம் கட்டமாக நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தத... மேலும் பார்க்க

இலவசமாக வண்டல், களிமண் எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நீா்வளம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நீா் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண் போன்ற சிறுவகை கனிமங்களை இலவசமாக எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும... மேலும் பார்க்க

அரியலூரில் மே 14-இல் நான் முதல்வன்,கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி

அரியலூரில் மே 14-ஆம் தேதி நான் முதல்வன், கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா். இது தொடா்பான ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு... மேலும் பார்க்க

நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை அகற்ற சல்பேட் மருந்தை பயன்படுத்தலாம்: வேளாண் இயக்குநரகம்

திருமானூா் பகுதிகளில் நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை, சல்பேட் மருந்தை பயன்படுத்தி, சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என வட்டார வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சோ்ந்த பணியாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா ம... மேலும் பார்க்க