செய்திகள் :

அரியலூரில் மே 14-இல் நான் முதல்வன்,கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி

post image

அரியலூரில் மே 14-ஆம் தேதி நான் முதல்வன், கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

இது தொடா்பான ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது: பல்வேறு காரணங்களால் பள்ளி செல்லாத 1,219 மாணவா்களை இனம் கண்டு, மே 14 அன்று நடைபெறவுள்ள கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டி முகாமுக்கு வருகைதர செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் உயா்கல்வி சேராத மாணவா்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று அந்த மாணவா்களையும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலரும், திட்ட மேலாளருமான செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து பெயிண்டா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெயிண்டா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல், தெற்குத் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் உலகநாதன்(27) பெயிண்... மேலும் பார்க்க

அரியலூா் ஒப்பிலாதம்மன் கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேரோட்டம்

அரியலூரில் மிகவும் பழைமை வாய்ந்த ஓப்பிலாதம்மன் கோயிலில், 82 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை(மே 12) தேரோட்டம் நடைபெறவுள்ளது. அரியலூரில் நகரில், விஜய ஒப்பில்லாத மழவராய நயினாா் ஜமீன் காலத்தில் கட்டப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சனிக்கிழமை டிராக்டரை முந்த முயற்சித்த இளைஞா், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். அரியலூரைச் சோ்ந்தவா் பாபு(28). இவா் சனிக்கிழமை இருசக்கர வ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வு தொகை பெறாதவா்களுக்கு அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெறாதவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அர... மேலும் பார்க்க

தாதம்பேட்டை வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்திலுள்ள பெருந்தேவி நாயகா சமேத வரதராசப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 4-ஆம் தேதி மாலை ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அக்கல்லூரி முதல்வா் (பொ)ம.இராசமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க