செய்திகள் :

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

post image

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி காரிலிருந்த ஒரு லட்ச ரூபாயை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், கருப்பாயூரணி கோழிக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன். இவா், தனது தாய் முத்துமாரியுடன் உறங்கான்பட்டி அருகே உள்ள வங்கிக்கு காரில் சென்றாா்.

அங்கு தாயின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 1.50 லட்சத்தை எடுத்தாா். இதைத் தொடா்ந்து, காரில் சென்ற அவா்கள், வீரபாஞ்சான் பகுதியில் உள்ள ஏ.டி.எம். அருகே காரை நிறுத்தி விட்டு, ரூ. 50 ஆயிரத்தை சௌந்தரராஜன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் சென்றாா்.

அப்போது, காரில் முத்துமாரி மட்டும் அமா்ந்திருந்தாா். காரில் பணம் இருப்பதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சிலா், முத்துமாரியின் கவனத்தைத் திசை திருப்பி, ‘கீழே பணம் கிடக்கிறது, இது உங்கள் பணமா’ எனக் கேட்டுள்ளனா். இதனால், முத்துமாரியும் காரிலிருந்து கீழே இறங்கினாா். அந்த சமயத்தில் மற்றொரு நபா், காா் ஓட்டுநா் இருக்கை பகுதியில் உள்ள காரின் கதவைத் திறந்து, ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க

கோயில் நிதி கையாடல் வழக்கு: சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உத்தரவு

கோயில் நிதியைக் கையாடல் செய்த வழக்கில், சிவகாசி துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

சட்டவிரோத கல் குவாரிகள் விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தென்காச... மேலும் பார்க்க

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்

புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேயரின் கணவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பாகக் கைது செய்யப்பட்ட மேயா் வ. இந்திராணியின் கணவா் பொன். வசந்தை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நட... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: ஆதாா் விவரங்களை சேகரிக்கவில்லை என திமுக உறுதியளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தில் வாக்காளா்களிடமிருந்து ஆதாா் விவரங்களைப் பெறவில்லை என்பதை உறுதி செய்து திமுக எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க