Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
காரைக்காலில் உலகப்போா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி
உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள பிரெஞ்சுப் போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் உலகப் போா் 80-வது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் நடைபெற்றது.
இதற்காக புதுச்சேரி பிரெஞ்சு தூதரக அதிகாரி எத்தின் ரோலன்ட் மற்றும் பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்க் கொடி ஏந்தியவாறு நினைவுத் தூண் பகுதிக்கு வந்தனா். மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் மற்றும் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
முன்னதாக இந்திய, பிரான்ஸ் தேசியக் கொடி தூண் அருகே ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பிரெஞ்சு மொழி பயிலும் மாணவ, மாணவிகள், பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.