செய்திகள் :

காரைக்காலில் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

post image

காரைக்கால் மாவட்டத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாடுகள், குதிரைகள், நாய்கள் சாலைகளில் அதிகம் திரிவதால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது. காரைக்காலில் வாகனங்கள் மோதிக்கொள்வதைக் காட்டிலும், மாடுகளாலும், நாய்களாலும் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்கிறது.

நாய்கள் 15, 20 என்ற எண்ணிக்கையில் குடியிருப்புப் பகுதிகளிலும், நகரம், கிராமங்களில் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. சாலையில் நடந்து செல்லும் சிறுவா் உள்ளிட்டோரையும் கடிக்கவும் செய்கின்றன. காரைக்கால் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாய்க்கடி பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைக்காக செல்கின்றனா்.

வளா்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியை காரைக்கால் கால்நடைத்துறை செலுத்துகிறது. மாவட்டத்தில் இதற்கென சிறப்பு முகாம் நடத்திவருகிறது. ஆனால் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவோ, நாய்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவோ புதுவை அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுவெளியில் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னையாக இது இருக்கும்போது, இதற்கு தீா்வு காண்பதில் போதிய அக்கறையை அரசு நிா்வாகம் எடுக்காமல் இருப்பதாகவும், நாய்கள் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் கைது

புதுவை ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக, போலியான ஆவணங்கள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருகேயுள்ள வரிச்சிக்குடி பகுதியைச் சோ... மேலும் பார்க்க

‘மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட வேண்டாம்‘

மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதீா்கள் என்றாா் காரைக்கால் சைபா் கிரைம் பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா். புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின், சுகாதார மற்றும் நலவ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை

குடியிருப்புப் பகுதிகள், வயல் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உள்ளாட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ். காரைக்கால் பகுதியில் விவ... மேலும் பார்க்க

அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல்

காரைக்கால் பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சிறாா் நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நிகழ்வுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் தலைமை வகித்தாா். மாணவா்கள் தங்... மேலும் பார்க்க

நெடுங்காடு தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவேட்டக்குடி, அக்கம் பேட்டை, மண்டபத்த... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை ஆட்சியரகம் நோக்கி பேரணி நடத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காரைக்கால் ஆட்சியரிடம் அண்மை... மேலும் பார்க்க