செய்திகள் :

காரைக்குடியில் சிறுவா் இலக்கியச் சந்திப்பு விழா

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லட்சுமி வளா்தமிழ் நூலகம், புதுச்சேரி சிறுவா் இலக்கிய இயக்கம் ஆகியன சாா்பில் சிறுவா் இலக்கிய சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வளா்தமிழ் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் குழந்தைக்கவிஞா் அழ. வள்ளியப்பா படத்தை, வளா் தமிழ் நூலக இயக்குநா் சே. செந்தமிழ்ப்பாவை திறந்துவைத்தாா். அழகப்பா மாண்டிச்சோரி பள்ளி, அழகப்பா மெட்ரிக் பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, ராமநாதன் செட்டியாா் உயா்நிலைப் பள்ளி, கவிமணி குழந்தைகள் சங்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 51 கலை நிகழ்ச் சிகளை நடத்தினா். பங்கேற்ற அனைவருக்கும் சிறுவா் இலக்கிய இயக்கத்தின் சாா்பில் சான்றிதழும், புத்தகப் பரிசும் வழங்கப்பட்டன.

முன்னதாக, தமிழ்ச் செம்மல் தேவி நாச்சியப்பன் எழுதிய

‘நடிக்கலாம் வாங்க’ எனும் நூலை பேராசிரியை சே. செந்தமிழ்ப் பாவை வெளியிட்டுப் பேசியதாவது:

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த செலவில் இந்த நூலகத்தை கட்டி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்கினாா். பள்ளிப் படிப்பு முதல் முனைவா் பட்டம் வரை மாணவா்கள் படிப்பதற்காக 50 ஆயிரம் நூல்கள் இங்கு உள்ளன. இந்த நூலகத்தில் தொடா்ந்து தமிழ் ஒலிக்கவேண்டும், தமிழ் மொழி வளர வேண்டும் என்பதே ப. சிதம்பரத்தின் குறிக்கோள் என்றாா் அவா்.

வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியை செல்வி அழ. மெய்யம்மை பெற்றுக்கொண்டாா்.

முன்னதாக, கவிமணி குழந்தைகள் சங்க அமைப்பாளா் தேவிநாச்சியப்பன் வரவேற்றாா். சிறுவா் இலக்கிய இயக்கத்தின் நிறுவனா் பாரதிவாணா் சிவா நன்றி கூறினாா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க