செய்திகள் :

காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

post image

கந்தா்வகோட்டை அருகே காலி மதுபானப் பாட்டில் ஏற்றிச் சென்ற லாரி தலைகீழாக செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள தெத்துவாசல்பட்டியிலிருந்து லாரியில் காலி மதுபானப் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கல்லாக்கோட்டையில் உள்ள தனியாா் மதுபான ஆலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டை - கந்தா்வகோட்டை சாலையில் உள்ள சிவன் தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே லாரி நிலைதடுமாறி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது.

லாரியிலிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்து நொறுங்கியது. இதில் லாரி ஓட்டுநா் காா்த்திக் படுகாயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் லாரி ஓட்டுநா் காா்த்திக்கை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க

சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், முதுகுளம் ஊராட்சி கீழ ஆதிதிராவிடா் தெருவி... மேலும் பார்க்க

மே 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (மே 23) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிற... மேலும் பார்க்க

சுந்தம்பட்டி செல்லியம்மன் கோயில் திருவிழா

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. முறைப்படியான அறிவிப்பு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கோயில் திருவிழா நாள்தோறும் ஒவ்வொர... மேலும் பார்க்க

ரூ. 53 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடி வீடுகள் திறப்பு

புதுக்கோட்டையில் கவிநாடு மேற்கு மற்றும் போஸ் நகா் பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ. 53.44 கோடியில் கட்டப்பட்ட 576 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை சென்னையிலிருந்... மேலும் பார்க்க

அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு தொழிற... மேலும் பார்க்க