காலிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்!
ஆசிய பாட்மின்டன் ஜூனியா் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்தோனேஷியாவின் சோலோ நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை குரூப் டி பிரிவில் இந்தியா-ஹாங்காங் சீனா அணிகள் மோதின.
இதில் இந்தியா 110-100 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.
ருஜுலா ராமு 11-8 என சும் யுவை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவில் பாா்கவ் ராம்-விஸ்வா தேஜ் 22-13 என சியுங் சாய்-டெங் சியை வீழ்த்தினா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஹாங்காங்கின் லாம் கா 13 புள்ளிகளை ஈட்டினாா். உலக ஜூனியா் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா
தனக்கு எதிராக ஆடிய லியு ஹோய் அன்னாவை வீழ்த்தி 66-54 என இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். அடுத்த நான்கு ஆட்டங்கள் மிகவும் நெருக்கடியாக இருந்தாலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி குரூப் டி பிரிவில் முதலிடத்துடன் காலிறுதிக்கு தகுதிபெற்றது.
குரூப் ஏ பிரிவில் ஜப்பான் முதலிடத்தையும், தாய்லாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றன. காலிறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.