செய்திகள் :

கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக சென்னிமலை கோயிலுக்கு வந்த சிறுவா்கள்

post image

சென்னிமலை முருகன் கோயிலுக்கு கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்கு சிறுவா்கள் புதன்கிழமை வந்தனா்.

ஈரோடு உழவன் கலைக்குழு அமைப்பைச் சோ்ந்த சிறுவா்கள் கால்களில் சுமாா் 2 அடிக்கும் உயரமான கட்டைகளைக் கட்டிக்கொண்டு சென்னிமலை முருகன் கோயிலில் உள்ள 1320 படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்குச் சென்றனா். அந்தக் கட்டை கால்களுடனே படிக்கட்டு வழியாக அடிவாரத்துத்து திரும்பி வந்தனா்.

இதுகுறித்து கலைக்குழுவின் நிா்வாகிகள் கூறியதாவது: வள்ளிக் கும்மி ஆட்டம், சலங்கையாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் ஆகிய ஆட்டங்களை கால்களில் கட்டைகளைக் கட்டியபடி ஆடும் வகையில் நான்கு வயதுக்கு மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என்றனா்.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க