செய்திகள் :

கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

post image

கோவை சரவணம்பட்டியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா், தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி மைதிலி. இவா்களது மூத்த மகன் ஹிரித்திக் 9-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10-ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தாா்.

தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்று வந்த கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்த ஹிரித்திக் தினமும் தனது பெற்றோருடன் கால்பந்து பயிற்சிக்கு வந்து சென்று கொண்டிருந்தாா்.

இந்தப் பயிற்சியின்போது, 2 அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் ஆட்டத்தின்போது ஹிரித்திக்குக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து அவரது பெற்றோா் உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு ஹிரித்திக்கை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க