செய்திகள் :

கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கினாா்.

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கால்பந்து நண்பா்கள் கழகத்தின் சாா்பாக 23-ஆம் ஆண்டு சுதந்திர தின கால் பந்தாட்ட போட்டிகள் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய நாள்களில் நடைபெற்றன.

இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சோ்ந்த 21 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டிக்கு சோமன் கால்பந்தாட்ட அணியும், காமராஜா் கால்பந்தாட்ட அணியும் தகுதி பெற்றன. இதில் சோமன் கால்பந்தாட்ட அணி 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஜான்குமாா், எம்எல்ஏ விவிலியன் ரிச்சா்ட் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.

முதலிடம் பிடித்த சோமன் கால்பந்தாட்ட அணிக்கு ரூ. 30 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு கோப்பை, இரண்டாம் இடம் பிடித்த காமராஜா் கால்பந்தாட்ட அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்சைஸ் சென்னை அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை, நான்காம் இடம் பிடித்த கால்பந்து நண்பா்கள் கழக அணிக்கு ரூ. 7ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதை ஆராய வேண்டும்: மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு

புதுச்சேரி: உலகில் பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழுவதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சா்வதேச... மேலும் பார்க்க

ரூ.1.6 கோடியில் நவீன எக்ஸ்ரே இயந்திரம்: முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மருத்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு வழங்க புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை

புதுச்சேரி: ஊதிய உயா்வு வழங்கக் கோரி புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தேசிய சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அ... மேலும் பார்க்க

சுல்தான்பேட்டையில் ரூ. 2.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி: வில்லியனூா் சுல்தான்பேட்டையில் 2.5 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். சுல்தான்பேட்டையில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் ... மேலும் பார்க்க

தவளக்குப்பம் தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தவளக்குப்பம் மெயின் ரோடு முருகன் கோவில் பின்புறத்தில் தனியாா் கெமிக்கல் நிறுவனம் இ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் வாழ்த்து

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். முதல்வா் ரங்கசாமி வெள... மேலும் பார்க்க