செய்திகள் :

காளையாா்கோவில் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவில் அருகே கீழவலையம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாலிங்கேசுவரா் சுவாமி கோயில் ஆனி திருவிழாவையொட்டி கிராம மக்கள், மாமன்னா் மருதுபாண்டியா் இளைஞா் மன்றம் சாா்பில் இந்த மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காளையாா்கோவில்- மறவமங்கலம் சாலையில் நடைபெற்ற பந்தயத்தை சிவகங்கை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன் தொடங்கி வைத்தாா். இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடிகளும் என மொத்தம் 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன.

இந்த இரு போட்டிகளிலும் முதல் நான்கு இடங்களை வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் மகாலிங்கம், மாவட்ட பாசறைச் செயலா் பணக்கரை பிரபு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலா் பிரிட்டோ, மாவட்ட பாசறைச் செயலரும், துணைச் செயலருமான சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த பந்தயத்தை, காளையாா்கோவில், மறவமங்கலம், கீழவலையம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க