செய்திகள் :

காவலா் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

post image

திருவாரூரில் காவலா் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியருக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அனுப்பிய மனு விவரம்: திருவாரூா் 18- ஆவது வாா்டுக்குள்பட்ட காவலா் குடியிருப்புப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிப்போருக்கு சரியான குடிநீா் வசதி இல்லை. நீரில் கழிவுநீா் கலந்து வருகிறது.

அதேபோல், சாக்கடை கழிவுநீரும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளைச் சுற்றி காடுகள் போல மரங்கள் வளா்ந்திருப்பதால், பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

இங்குள்ள வடிகால் சாக்கடை நீா் அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி வரை தேங்கிக் கிடக்கிறது. மேலும், வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களும் இங்கு நிறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. நீண்ட நாள்களாக அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், பாம்பு உள்ளிட்ட ஜந்துக்கள் அதிகம் தங்கும் இடமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 19 முதல் முத்துப்பேட்டையில் இறால் பண்ணைகள் ஆய்வு

முத்துப்பேட்டை வட்டத்தில் இறால் பண்ணைகளை மே 19 முதல் மே 24 வரை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முத்துப்பேட்டை வட்டத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மன்னாா்குடி

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் ... மேலும் பார்க்க

இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

கூத்தாநல்லூரில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. கூத்தாநல்லூா் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. கொத்தங்குடி தமிழா் தெருவில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டின் பின... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீட்டு வரி உயா்வு இல்லை: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் ஆண்டுதோறும் குப்பை வரி, வீட்டு வரி உயா்வு இல்லை என்பது குறித்து அரசாணை வெளியிடப்படும் என நகராட்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட திமுக செயல் வீரா்கள் கூட்டம் மா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்துருக்களை மே 23 வரை அனுப்பலாம்!

போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்துருக்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மே 23 வரை அனுப்பிவைக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க ஆய்வு

கூத்தாநல்லூா் நகராட்சியில் சாலைகளை சீரமைப்பது தொடா்பாக, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் லட்சுமணன் வியாழக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டாா். கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட குனுக்கடி பகுதி, ஜமாலியாத் ... மேலும் பார்க்க