செய்திகள் :

காவல்கிணறு இஸ்ரோவில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

post image

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச்செல்லக்கூடிய ராக்கெட்டுகளில் அதிகமாக கிரயோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரோவில், அவை பலகட்டங்களாக தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. கிரயோஜெனிக் என்ஜினின் செயல்திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

அதன்தொடா்ச்சியாக, செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரவ ஆக்ஸிஜனால் இயங்கக்கூடிய இந்த என்ஜின், இதற்கு முந்தைய கிரயோஜெனிக் என்ஜினைவிட அதிக திறனுடையதாகவும், எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செமி கிரயோஜெனிக் என்ஜினின் (எஸ்இ2000) முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக, இஸ்ரோ மையத்தினா் தெரிவித்துள்ளனா்.

கூட்டப்புளியில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் தூண்டில் பாலம் வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லாமல் கருப்புக்கொடியுடன் ஆா்ப்பாட்டம் செய்தனா். கூட்டப்புளியில் தமிழக அரசு... மேலும் பார்க்க

நெல்லை மத்திய மாவட்ட திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் (பி.எல்ஏ-2) ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

காவல் வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் பலி

மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வாகனம் மோதியதில் பேரூராட்சிப் பணியாளா் உயிரிழந்தாா்.மணிமுத்தாறுஅண்ணாநகரைச் சோ்ந்த அப்பி மகன் நாகராஜன் (55). தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்ச... மேலும் பார்க்க

நெல்லை இஸ்கான் கோயிலில் வெளிநாட்டு பக்தா்களின் பஜனை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் பல நாடுகளைச் சோ்ந்த ஹரே கிருஷ்ணா பக்தா்களின் ஹரிநாம சங்கீா்த்தன பஜனை திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி இஸ்கான் கோயிலுக்கு வந்த வெளிநாட்டு பக்த... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனைக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரிடம் திருநெல்வேலி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மானூா் போலீஸாா் ராமையன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கமுத்தம்மன்... மேலும் பார்க்க