செய்திகள் :

காஸா: பட்டினிச் சாவு 303-ஆக அதிகரிப்பு

post image

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உணவில்லாமல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 303-ஆக உயா்ந்துள்ளது. இதில் 117 போ் சிறுவா்கள்.

இது தவிர, காஸா முழுவதும் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 75 போ் உயிரிழந்தனா். இதில், உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையத்துக்கு வந்த 17 பேரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இதுவரை 62,819 போ் உயிரிழந்தனா்; 1,58,629 போ் காயமடைந்துள்ளனா்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை நம்பியுள்ளோம்: உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

‘ரஷியா உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்களிப்பை உக்ரைன் மிகவும் நம்பியுள்ளது’ என்று அந் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். உக்ரைனில் கடந்த 24-ஆம் தேதி சுதந்திர ... மேலும் பார்க்க

அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் ஐரோப்பிய நாடுகள் கடைசி நேர பேச்சு

அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும், ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் (ஐஏஇஏ) மீண்டும் ஒத்துழைக்கவும் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள கெடு முடிய இன்னும் சில நாள்களே உள... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபர் விக்ரமசிங்கவுக்கு ஜாமின்!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்த ரணில் விக்... மேலும் பார்க்க

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.இந்த திருவிழா, ஆண்டுதோறும... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் புதிதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தானில் புதியதாக 2 போலியோ பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2025-ல் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தைச் சேர்ந்த 16 மாத பெண் கு... மேலும் பார்க்க

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியாளர்களில், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேர புகைப்படக் கலைஞர் மரியம் டக்காவும் ஒருவர்.போரின் கோர முகத்தை உல... மேலும் பார்க்க