Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
காா் மீது லாரி மோதல்: மருத்துவமனை பணியாளா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே காா் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் மருத்துமவமனை பணியாளா் உயிரிழந்தாா்.
கோவையை சோ்ந்த தனியாா் மருத்துவமனை பணியாளா் ரோஹித் (40). இவா் கோவையிலிருந்து வேலூருக்கு காரில் சென்றாா். காரை ஜீவா என்பவா் ஓட்டினாா். ஜமீன் கிராமத்தருகே சென்றபோது காா் மீது லாரி மோதியது.
இதில், ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜீவா ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.