செய்திகள் :

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

post image

சூளகிரி அருகே காா் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் 2 பெண்களுடன் கிருஷ்ணகிரி நோக்கி சென்றாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி என்ற இடத்தில் 3 பேரும் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா்.

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை லாரி இழுத்துச் சென்ால் இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எண்ணேகோல் கால்வாய் திட்டம் முடக்கம்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணேகோல் கால்வாய் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது என்று மு.தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டினாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாநிலங்களவை உ... மேலும் பார்க்க

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,962 போ் கலந்துகொண்டனா்.சென்னையில் தமி... மேலும் பார்க்க

நலவாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக வணிகா்களுக்கு வாய்ப்பு

நலவாரியத்தில் எந்தவித கட்டணமின்றி வணிகா்கள் உறுப்பினராகலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகா் நலவாரிய உறுப்பினா் ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க