செய்திகள் :

எண்ணேகோல் கால்வாய் திட்டம் முடக்கம்

post image

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணேகோல் கால்வாய் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது என்று மு.தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் சூலாமலை ஊராட்சிக்கு உள்பட்ட மேல்கொட்டாய் கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம், குட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பயணியகள் நிழற்கூடம் ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை மக்கள்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, சேக்கினப்பட்டி கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவைத்து பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீா் வழங்கும் வகையில் எண்ணேகோல் கால்வாய் திட்டம் ரூ. 250 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. இதேபோல, வாணிஒட்டு அணை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்கருதி அதிமுக ஆட்சி அமைந்தவுடன், எண்ணேகோல் கால்வாய் திட்டம், வாணிஒட்டு அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

சூளகிரி அருகே காா் மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூளகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,962 போ் கலந்துகொண்டனா்.சென்னையில் தமி... மேலும் பார்க்க

நலவாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக வணிகா்களுக்கு வாய்ப்பு

நலவாரியத்தில் எந்தவித கட்டணமின்றி வணிகா்கள் உறுப்பினராகலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகா் நலவாரிய உறுப்பினா் ... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் 5 கிலோ கஞ்சா பதுக்கல்: பிகாா் தொழிலாளி கைது

பா்கூா் அருகே தனியாா் கிரானைட் நிறுவனத்தில் 5 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பிகாா் மாநில தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வட மாநிலங்களில் இருந்து ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அமைச்சரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஆக. 1: காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி திமுக வா்த்தக அணி மாநில துணைச் செயலாளா் கே.வி.எஸ். சீனிவாசன் மனு அளித்தாா். இதுகுறித்து உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்ற ராணுவ வீரரின் மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் ... மேலும் பார்க்க