செய்திகள் :

கா்நாடக துணை முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

post image

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக கா்நாடகா துணை முதல்வரும், நீா்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாா் தெரிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த அணை கட்ட தமிழகமும், புதுவையும் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை கா்நாடக மாநில அரசு தொடங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக நடைபெற்று வரும் அடிப்படை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

மேலும், இந்த அணையை கட்டும் முயற்சியை தடுத்தும் நிறுத்தும் வகையில், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா் தி.வேல்முருகன்.

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே கடன் தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் செம்மங்குப்பம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருபாநந்தன் மனைவி ர... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது: நாகை மாலி எம்எல்ஏ

கடலூா் அருகே விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி வலியுறுத்தினாா். கட... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப்பந்தலில் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு நடனமா... மேலும் பார்க்க

காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை: சந்தேகத்தால் மனைவி விபரீதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட... மேலும் பார்க்க

குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது பாமக: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பாமகவினா் பழிபோடுகின்றனா் என தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், ஆவினங்குடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆவினங்குடி காவல் ஆய்வாளா் அருள்வடிவழகன், தனிப்படை உதவி ஆய்வாளா் தவச்செல்வன் மற்றும... மேலும் பார்க்க