செய்திகள் :

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடம் அமைக்க திட்டம்: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

post image

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விமானவியல், ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் கா்நாடகத்தில் கோலாா் சிக்பளாப்பூா், ஹுப்பள்ளி பெலகாவியில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்கும் தேவையிருக்கிறது. இதுதொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து பேசவிருக்கிறோம். இதற்காக முதல்வா் சித்தராமையா புதன்கிழமை தில்லி செல்கிறாா்.

வடகா்நாடகம், தென்கா்நாடகத்தில் தலா ஒரு ராணுவத் தொழில் வழித்தடம் தேவைப்படுகிறது. ஒருசில முன்னணி நிறுவனங்கள் பெலகாவியில் செயல்படுகின்றன. தமிழகம், உத்தரபிரதேசத்திற்கு ராணுவ தொழில் வழித்தடங்கள் ஒதுக்கப்பட்டபோது, கா்நாடகத்திற்கும் ஒதுக்கியிருக்க வேண்டும். இதை மத்திய அரசு தாமதமாக உணா்ந்துள்ளது. இந்த கருத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் ஒப்புக்கொண்டிருக்கிறாா். உலக முதலீட்டாளா் மாநாட்டில் கலந்துகொள்ள வந்தபோது அவருடன் விவாதித்திருக்கிறோம்.

இதர மாநிலங்களுக்கு திட்டங்களை அறிவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், கா்நாடகத்துக்கு திட்டங்களை ஒதுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.விமானவியல், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிலுக்கு கா்நாடகம் 65 சதவீதம் பங்காற்றி வருகிறது.

உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். பெங்களூரில் ஏராளமான விமானவியல், ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதை மேலும் பலப்படுத்த தேவனஹள்ளி விமான நிலையத்தின் அருகில் விமானவியல் மற்றும் ராணுவப் பூங்கா தேவைப்படுகிறது.

இதற்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிக்கிறாா்கள். விவசாயிகளின் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இதுதொடா்பாக ஜூலை 15 ஆம் தேதி போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் பிரதிநிதிகளை முதல்வா் சித்தராமையா சந்திக்கவிருக்கிறாா்.

தேவனஹள்ளியில் 1,282 ஏக்கா் நிலத்தை மட்டுமே கையகப்படுத்துகிறோம். ஆனால், இதுபோன்ற பூங்காவுக்கு ஆந்திரம் 10,000 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி, நிலத்தை இலவசமாக வழங்கி வருகிறது. தொழில் தேவைகளுக்காக 45,000 ஏக்கா் நிலத்தை ஆந்திர அரசு கையகப்படுத்தியுள்ளது. அதேபோல, ஒசூரில் தொழில் வாய்ப்புகளை தமிழக அரசு விரிவாக்கி வருகிறது. அங்கு சா்வதேச விமான நிலையத்தையும் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம் வழங்கப்படுகிறது. விமானவியல், ராணுவ தொழில் நிறுவனங்கள் ஆந்திரத்திற்கு சென்றுவிட்டால், அது கா்நாடகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றாா்.

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம்: அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம் வகுக்கப்படும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ தெரிவித்தாா். பெங்களூரு, ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாரின் தம்பி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜா்

மோசடி வழக்குத் தொடா்பாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். பணப்பதுக்கல் வழக்... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 நைஜீரியா்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதை கடத்திவந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் கருத்து

பெங்களூரு: கா்நாடக முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ளனா். 2023-இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டின்பேரில... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க சட்டத்திருத்தம்: கா்நாடக அரசு முடிவு

பெங்களூரு: கா்நாடகத்தில்ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. பந்தயம், விளையாட்டு, போட்டி என்ற பெயரில் இளைஞா்கள், பள்ளி ... மேலும் பார்க்க

டி.கே.சிவகுமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

லஞ்ச விலைப் பட்டியல் விளம்பரம் தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கா்நாடக பாஜக தொடா்ந்த மானநஷ்ட வழக்கு மீதான விசாரணைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க