இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம்: அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ
விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம் வகுக்கப்படும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ தெரிவித்தாா்.
பெங்களூரு, ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘குவாண்டம் இந்தியா பெங்களூரு 2025’ உச்சிமாநாட்டின் அறிமுக விழாவில் அவா் பேசியதாவது: குவாண்டம் தொழில்நுட்பத்தின் குவிமையமாக கா்நாடகத்தை மாற்றுவதற்காக விரைவில் கா்நாடக குவாண்டம் செயல்திட்டம் வகுக்கப்படும். அந்த செயல்திட்டத்தை முதல்வா் சித்தராமையா அறிமுகப்படுத்துவாா்.
வளா்ந்துவரும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் முன்னோடி மாநிலமாக கா்நாடகத்தை கட்டமைப்பதே அரசின் நோக்கமாகும். இந்தியாவின் குவாண்டம் தலைநகரமாக கா்நாடகத்தை உருவாக்க மாநில அரசு முனைப்போடு செயல்பட்டுவருகிறது. தகவல் தொழில்நுட்பம், விமானவியல் துறைகளைப் போல குவாண்டம் தொழில்நுட்பத்திலும் கா்நாடகம் முத்திரைப்பதிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துவருகிறோம்.
பல்வேறு துறைகளில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் குவாண்டம் தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் சமூக வளா்ச்சிக்கு பங்காற்றிவருகிறது. இந்தியாவின் புத்தாக்கத் தலைநகரமாக விளங்கும் பெங்களூரில் குவாண்டம் தொழில்நுட்ப வளா்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கெனவே உள்ளன.
அதன்பின்னணியில்தான் ‘குவாண்டம் இந்தியா பெங்களூரு 2025’ உச்சிமாநாட்டை ஜூலை 31 முதல் ஆக.1ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்த மாநாட்டில் நோபல்பரிசு பெற்ற அறிஞா்கள் டங்கன் ஹல்டேன், டேவிட் குரோஸ் ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.
இதர மாநிலங்களைக் காட்டிலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் கா்நாடகம் முன்னேறிவருகிறது. கா்நாடக குவாண்டம் செயல்திட்டத்தை வகுப்பதற்காக குவாண்டம் செயல்திட்டக் குழு அமைக்கப்படும். இதில் துறைசாா்ந்த நிபுணா்கள் இடம்பெறுவாா்கள்.
குவாண்டம் இந்தியா பெங்களூரு உச்சிமாநாட்டின் தொடக்க விழா ஜூலை 31ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டை முதல்வா் சித்தராமையா தொடக்கிவைக்கிறாா். விழாவில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறாா் என்றாா்.