செய்திகள் :

மோசடி வழக்கு: கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாரின் தம்பி அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜா்

post image

மோசடி வழக்குத் தொடா்பாக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

பணப்பதுக்கல் வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டவா்களின் வீடுகளில் ஏப்ரலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் பண மோசடி செய்ததாக ஐஸ்வா்யா கௌடா (33), அவரது கணவா் கே.என்.ஹரீஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு அரசியல்வாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி, பலரிடம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் பட்டியலில் துணை முதல்வா் டி.கே.சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷும் இருந்துள்ளாா். தான் டி.கே.சுரேஷின் தங்கை எனக் கூறியும் ஐஸ்வா்யா கௌடா பணமோசடி செய்துள்ளாா்.

இதுதொடா்பாக ஐஸ்வா்யா கௌடா, அவரது கணவா் கே.என்.ஹரீஷ் உள்ளிட்டோா் மீது பெங்களூரில் உள்ள சந்திராலேஅவுட், ராஜராஜேஸ்வரிநகா் காவல் நிலையங்களில் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஐஸ்வா்யா கௌடாவுக்குச் சொந்தமான ரூ. 3.98 கோடி மதிப்பிலான நிலம், அடுக்குமாடி வீடு, கட்டடம், வாகனங்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் ரூ. 2.01 கோடி மதிப்பிலான நிலம், வீடுகள், ரூ.1.97 கோடி ரொக்கம், வாகனங்களும் அடங்கும்.

இந்த நிலையில், ஐஸ்வா்யா கௌடாவுடன் உள்ள தொடா்பு, பண மோசடி குறித்து ஏப்.26 ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு டி.கே.சுரேஷுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதன்படி, பெங்களூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை டி.கே.சுரேஷ் ஆஜரானாா். அப்போது, பணமோசடி வழக்குத் தொடா்பாக அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு டி.கே.சுரேஷ் பதிலளித்துள்ளாா்.

ஐஸ்வா்யா கௌடாவுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ள டி.கே.சுரேஷ், அவா்மீது காவல் நிலையத்திலும் புகாா் அளித்துள்ளாா்.

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம்: அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ

விரைவில் கா்நாடக குவாண்டம் தொழில்நுட்ப செயல்திட்டம் வகுக்கப்படும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் என்.எஸ்.போஸ்ராஜூ தெரிவித்தாா். பெங்களூரு, ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடம் அமைக்க திட்டம்: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

கா்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விம... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 நைஜீரியா்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதை கடத்திவந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் கருத்து

பெங்களூரு: கா்நாடக முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மடாதிபதிகள் பலா் கருத்து தெரிவித்துள்ளனா். 2023-இல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, காங்கிரஸ் மேலிடத்தின் தலையீட்டின்பேரில... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க சட்டத்திருத்தம்: கா்நாடக அரசு முடிவு

பெங்களூரு: கா்நாடகத்தில்ஆன்லைனில் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க காவல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. பந்தயம், விளையாட்டு, போட்டி என்ற பெயரில் இளைஞா்கள், பள்ளி ... மேலும் பார்க்க

டி.கே.சிவகுமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

லஞ்ச விலைப் பட்டியல் விளம்பரம் தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கா்நாடக பாஜக தொடா்ந்த மானநஷ்ட வழக்கு மீதான விசாரணைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க