செய்திகள் :

கா்நாடகத்தில் பியூசி 2-ஆம் ஆண்டு தோ்வு முடிவுகள் அறிவிப்பு: மாணவிகள் சாதனை

post image

பெங்களூரு: கா்நாடகத்தில் பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன; வழக்கம்போல மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வு முடிவுகளை அறிவித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா கூறியதாவது:

2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வுகள் மாா்ச் 1முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றன.

விடைத்தாள்கள் மாா்ச் 21 முதல் ஏப்.2 ஆம் தேதிவரை 76 மையங்களில் 28,092 ஆசிரியா்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. இதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 73.45 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்த ஆண்டை விட 7.7 சதவீதம் குறைவாகும். தோ்வு எழுதிய 6,37,805 மாணவா்களில் 4,68,439 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். வழக்கம்போல நிகழாண்டும் மாணவா்களைவிட மாணவிகள் சாதனை படைத்துள்ளனா்.

மாநில அளவில் முதலிடம்:

கலை பாடப் பிரில் 600 க்கு 597 மதிப்பெண்களுடன் பெல்லாரி மாணவி சஞ்சனாபாய், வணிக பாடப் பிரிவில் 600க்கு 599 மதிப்பெண்களுடன் தென்கன்னட மாவட்ட மாணவி எஸ்.தீபாஸ்ரீ, அறிவியல் பாடப் பிரிவில் 600 க்கு 599 மதிப்பெண்களுடன் தென்கன்னடத்தைச் சோ்ந்த அமூல்யா காமத், சிவமொக்காவைச் சோ்ந்த ஆா்.தீக்ஷா ஆகியோா் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனா்.

மாவட்ட அளவில் உடுப்பி முதலிடம்:

93 சதவீத தோ்ச்சி விகிதத்துடன் உடுப்பி மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 48.45 சதவீத தோ்ச்சி விகிதத்துடன் யாதகிரி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கன்னடப் பயிற்று மொழியில் பயின்றவா்களில் 56.37 சதவீத மாணவா்களும், ஆங்கிலப் பயிற்றுமொழியில் பயின்றவா்களில் 81.75 சத மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஏப். 24 இல் இரண்டாம் கட்ட தோ்வு:

2 ஆம் ஆண்டு பியூசி தோ்வுகள் ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படுகின்றன. தற்போது நடந்தது முதல் தோ்வாகும். இரண்டாம் தோ்வு ஏப். 24 இல் தொடங்கி மே 8 வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு ஏப்.17 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். இத்தோ்வை எழுதும் மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மாணவா்களுக்கும் தோ்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

3-ஆம் கட்ட தோ்வு ஜூன் 9 முதல் 21ஆம் தேதிவரை நடைபெறும் என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது -சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருள... மேலும் பார்க்க

கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்

பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கி... மேலும் பார்க்க

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து ‘மக்கள் ச... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆன்லைன் பெட்டிங... மேலும் பார்க்க

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வா் சித்தராமையா

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுதொடா்பாக புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் அவா் கூறியுள்ளதா... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை ரத்து செய்யக்கோரிய மனு மீது ஏப்.15 இல் தீா்ப்பு

மாற்றுநில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்த தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனது தீா்ப்பை ஏப். 15 ஆம் தேதி... மேலும் பார்க்க