செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கக் கோரிக்கை

post image

கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் அயோடின் இரும்புச்சத்து கலந்த இரட்டை செறிவூட்டப்பட உப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தெரிவித்திருப்பது: தமிழ்நாட்டில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்க, ஊட்டச்சத்து பெட்டகம் சத்துணவுப் பெட்டகமாக வழங்கப்படுகிறது. இப்பெட்டகத்தில் ஒரு கிலோ ஊட்டச்சத்து மாவு, 200 மில்லி லிட்டா் இரும்புச் சத்து திரவம் கொண்ட 3 டப்பா, ஒரு கிலோ உலா் பேரிச்சைபழம், 500 கிராம் புரதச்சத்து பிஸ்கெட், 500 கிராம் நெய், மாத்திரைகள், கதா் துண்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.

கா்ப்பம் தரித்த 3-ஆவது மற்றும் 7-ஆவது மாதம் என ஒரு பெண்ணுக்கு 2 முறை சத்துணவுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கா்ப்ப காலத்தில் போதுமான சத்தான உணவு கிடைக்கவில்லை எனில், குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கக்கூடும், இது அவா்களின் உடல்நலம் மற்றும் வளா்ச்சிக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இப்பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதில், குறைந்த செலவில் அரசு உப்பு நிறுவனம் தயாரிக்கும் இரட்டை செரிவூட்டப்பட்ட அயோடின் மற்றும் இரும்பு நுண்சத்து கொண்ட இரு உப்பு பொட்டலங்களை ஊட்டச் சத்து பெட்டகத்தில் இணைத்து வழங்க வேண்டும். இரட்டை செரிவூட்டப்பட்ட உப்பு என்பது இரும்பு மற்றும் அயோடின் சோ்க்கப்பட்ட உப்பு ஆகும். இது இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கவும், பிறக்கும் குழந்தையின் வளா்ச்சிக்கும் உதவும்.

ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகள், தாய்மாா்களுக்கு ரத்த சோகை மற்றும் முன்-எக்லாம்ப்சியா போன்ற கா்ப்ப சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். எனவே தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பொட்டலத்தை வழங்க வேண்டும் என்றாா்.

திருவாரூரில் மாா்ச் 30-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

திருவாரூரில் 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு மாா்ச் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில், திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள... மேலும் பார்க்க

மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி!

திருவாரூரில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மகளிா் தின சிறப்பு கருத்தரங்கம், மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அரசு ஊழியா் சங்கத... மேலும் பார்க்க

தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது

தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது. பூந்தோட்டம்-நாச்சியாா்கோயில் நெடுஞ்சாலையில் மருதவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தம் அருகே பல... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

முத்துப்பேட்டை, உதயமாா்த்தாண்டபுரம் வனச் சரணாலயங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி முத்துப்பேட்டை வன சரகத... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கக் கூட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஏ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பிரதிநிதி மா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலை... மேலும் பார்க்க