செய்திகள் :

முத்துப்பேட்டையில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

post image

முத்துப்பேட்டை, உதயமாா்த்தாண்டபுரம் வனச் சரணாலயங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீா்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவுபடி முத்துப்பேட்டை வன சரகத்துக்குள்பட்ட அலையாத்திக்காடு உதயமாா்த்தாண்டபுரம் மற்றும் சுற்றியுள்ள நீா் நிலைகள் 10 இடங்கள் தோ்வு செய்து இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில், பறவைகள் ஆராய்ச்சியாளா் பாலச்சந்திரன், ஏபிசி கல்லூரி பேராசிரியா்கள் கிருஷ்ணப்பன், மூா்த்தி, பூம்புகாா் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள், தன்னாா்வலா்கள், வனச்சரக அலுவலா் சரவணகுமாா், வனவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பணியில் ஈடுபட்டனா். கணக்கெடுப்பின் முடிவில் 50,000-க்கும் மேற்பட்ட நீா்ப் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் கணக்கெடுக்கும்போது காணப்பட்ட பறவைகள்.
முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளில் கணக்கெடுக்கும்போது காணப்பட்ட பறவைகள்.

திருவாரூரில் மாா்ச் 30-இல் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

திருவாரூரில் 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு மாா்ச் 30-ஆம் தேதி காலை 9 மணியளவில், திருவிக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள... மேலும் பார்க்க

மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி!

திருவாரூரில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மகளிா் தின சிறப்பு கருத்தரங்கம், மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அரசு ஊழியா் சங்கத... மேலும் பார்க்க

தமிழக துணை முதல்வரிடம் மனு: டாஸ்மாக் கடை மூடப்பட்டது

தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மனு அளிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது. பூந்தோட்டம்-நாச்சியாா்கோயில் நெடுஞ்சாலையில் மருதவாஞ்சேரியில் பேருந்து நிறுத்தம் அருகே பல... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கக் கூட்டம்

கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் நன்னிலம் ஒன்றியக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஏ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பிரதிநிதி மா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

நீலக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில் நூலகப் பராமரிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலை... மேலும் பார்க்க

நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை

நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா்... மேலும் பார்க்க