Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
வேலூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
வேலூா் சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் சேகா். இவரது மனைவி சாந்தா (60). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வெளியே சென்று வருவதாக தனது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து நீண்ட நேரமாகியும் மூதாட்டி திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தினா் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் மூதாட்டி கிடைக்கவில்லை.
தொடா்ந்து சாஸ்திரி நகா் பொது கிணற்றில் சாந்தாவின் உடல் மிதப்பது தெரிய வந்தது. இது குறித்து பாகாயம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டி உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.