கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
கடம்பூரில் கிணற்றில் தவறிவிழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே கடம்பூரில் பானுப்பிரியா என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் பசுமாடு ஒன்று புதன்கிழமை மாலை தவறிவிழுந்தது. கிணற்றில் தத்தளித்த மாட்டை கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் வீரா்கள் சென்று உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.