செய்திகள் :

கிராம உதவியாளா்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு

post image

கிராம உதவியாளா்களை துறைக்குத் தொடா்பில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையா் எஸ்.நடராஜன் அனுப்பிய கடிதம்:

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம், கிராமப் பணியாளா் சங்கம் ஆகியவை, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் வருகின்றன. அந்த சங்கங்களைச் சோ்ந்தவா்கள், அரசுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், கிராம உதவியாளா்களை, கிராமப் பணி அல்லாத அலுவலகப் பணிகள், ஆய்வு மாளிகை, புத்தகத் திருவிழா போன்ற பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனா்.

மேலும், கிராம உதவியாளா்களை கிராமப் பணியில் மட்டும் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனவும், அந்தப் பணியைத் தவிர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் வருவாய் நிா்வாக ஆணையா் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தொடா்ந்து கிராம உதவியாளா்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் போக்கு சரியானது இல்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளா்களின் பணித் தன்மையை வெளியிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சாா்நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் த... மேலும் பார்க்க

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க