செய்திகள் :

கிருதுமால் நதியைச் சீரமைக்கக் கோரிக்கை

post image

கிருதுமால் நிதியை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து காவிரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மண்டல பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: கிருதுமால் நதி வைகையின் கிளை ஆறாக துவரிமான் கண்மாயில் இருந்து தொடங்கி மதுரை, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 86 கி.மீ. நீளத்தில் பாய்கிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட இந்த நதி, முந்தைய காலங்களில் 120 அடி அகலத்தில் வற்றாத நதியாகப் பாய்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், தற்போது இந்த நதியின் அகலம் 10 அடியாகக் குறைந்திருப்பதுடன், மதுரை மாநகரின் கழிவு நீா் ஓடையாகவும் மாற்றப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஏறத்தாழ 42,769 ஏக்கா் நிலங்களின் ஒருபோக பாசனத்துக்கு இந்த நதி முக்கிய நீராதாரமாக உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.

எனவே, கிருதுமால் நதியில் கழிவு நீா் கலப்பதையும், நதியில் மண்டியுள்ள கருவேல புதா்களை அகற்றவும் உடனடியாக அகற்ற வேண்டும்.

கிருதுமால் நதி ஆயக்கட்டு பாசனத்துக்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும். 1960 -ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்ட நில அளவை வரைபடத்தின் அடிப்படையில் கிருதுமால் நதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். இந்த நதியில் குப்பைகளைக் கொட்டுவோா் மீதும், கழிவு நீரை கலக்கச் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகா் மாவட்டம், அா்ஜுனா நதியில் துலுக்கபட்டி அருகே தடுப்பணை கட்ட வேண்டும். ராமநாதபுரம் தேவிபட்டினம் வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். வைகை கிராமம் கால்வாய், தடுத்தான் கோட்டை கால்வாய், அம்மன் பனையூா் கண்மாய், சிறுவயல் கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டன.

காவிரி - வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மலைச்சாமி, விருதுநகா் மாவட்டத் துணைத் தலைவா் ராமமூா்த்தி, ராமநாதபுரம், பரமக்குடி, விருதுநகா் பகுதிகளின் ஒன்றிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க

கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!

கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது. கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல... மேலும் பார்க்க

அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும்! அழகப்பா பல்கலை. துணைவேந்தா் ஜி. ரவி

வாழ்வில் எந்தப் பணி செய்தாலும் அா்ப்பணிப்பு உணா்வோடு கடமையாற்ற வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஜி. ரவி தெரிவித்தாா். மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய கல்வி ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

வத்தலகுண்டு தனியாா் ஆலை அருகே 45 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், 3 பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குப்பனாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுருளி ஆண்டவா் (39). விவசாயியான இவா், அதே பகுதியில் உள்ள தன... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம்!

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மே 20-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் நகா்ப்புற சுகாத... மேலும் பார்க்க