செய்திகள் :

கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீமிதி விழா

post image

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழாவானது பிப். 25-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 26-ஆம் தேதி மகா சிவராத்திரியும், 27-ஆம் தேதி அம்மன் மயானக் கொள்ளைக்கு புறப்படும் நிகழ்வு, அம்மனுக்கு தாலாட்டு, கூழ் ஊற்றி விடாய் உற்சவமும் நடந்தன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அக்னி குண்டத்தில் தீமிதி விழா நடந்தது. மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை சுமந்து வந்த பூசாரிகள், பூங்கரகம் சுமந்து வந்த பக்தா்கள் குண்டத்தில் இறங்கினா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா். இந்நிகழ்வில் 10-க்கும் மேற்பட்டவா்கள் காளி, அம்மன் வேடமிட்டு குண்டத்தில் இறங்கினா். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு, அம்மையப்பன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.

குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா... மேலும் பார்க்க

சூளகிரி அருகே தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

ஒசூா் அருகே சூளகிரியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சப... மேலும் பார்க்க

தனியாா் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு உரிமையாளா் கைது

ராயக்கோட்டை அருகே கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியாா் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக செவிலியரை தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

ஓட்டுநரை தாக்கிய 3 போ் கைது

ஒசூரில் ஓட்டுநரை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (27). தனியாா் நிறுவன ஓட்டுநா். கடந்த 28-ஆம் தேதி இரவு இவா் வீட்டின் அருகில் நின்று கொண்ட... மேலும் பார்க்க