கிருஷ்ணகிரியில் ஆள் கடத்தல், அடிதடி வழக்கில் 5 போ் கைது
கிருஷ்ணகிரியில் ஆள்கடத்தல், அடி, தடி வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் தலைமறைவான பாமக நகரச் செயலாளா் உள்பட இருவரை தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள குந்தாரப்பள்ளி பிரிவு சாலையைச் சோ்ந்த, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி அகில் (26), கிருஷ்ணகிரி தம்மண்ண நகரைச் சோ்ந்த பாமக நகரச் செயலாளா் நித்திஷ்குமாா்(27) ஆகியோா் தங்களது நண்பா் பிரபு பிரசாந்த என்பவருடன் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு உணவகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு பாரதியாா் நகரைச் சோ்ந்த சஞ்சய் (22) என்பவா், உணவு உண்டு கொண்டிருந்தாா். இவா்களுக்கு இடையே ஏற்கெனவே கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில், இவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, நித்திஷ்குமாா் தரப்பினா், சஞ்சயைக் கடத்தி சென்று, கிருஷ்ணகிரி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனா். அங்கிருந்து தப்பிய சஞ்சய் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்தாா். சஞ்சய் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து, நித்திஷ்குமாா் தரப்பைச் சோ்ந்த கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சோ்ந்த மஞ்சுநாத் (29), ராஜீவ்காந்தி நகா் காா்த்திக் (26), பிரபு பிரசாந்த் (28), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்த கவின் (26) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், இதே வழக்கில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், ஒசூரை சோ்ந்த கிரீன்பேட்ரிக் (31) என்பவரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகிரி நகர பாமக நகரச் செயலாளா் நித்திஷ்குமாா், அகில் ஆகியோரை தேடி வருவதாக தெரிவித்தனா்.