ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்
மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய்க்கு உரிய விலை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), பி.பாலகிருஷ்ணா ரெட்டி, டி.எம்.தமிழ்செல்வம் எம்எல்ஏ (ஊத்தங்கரை) உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.