செய்திகள் :

கிருஷ்ணகிரியில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரியில் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், எம்ஜிஅள்ளியைச் சோ்ந்த முருகேசன் மகன் தம்பிதுரை (20). இவா், மோட்டாா் சைக்கிளில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேட்டியம்பட்டி ஆலமரத்துக்கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தம்பிதுரையை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு...

குருபரப்பள்ளி அருகே உள்ள கங்கசந்திரத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (33). தொழிலாளி. இவா், மே 29-ஆம் தேதி இரவு, மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் இவரது மோட்டாா்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க