கிருஷ்ணகிரியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மின் விநியோகம் துண்டிப்பு; ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை பிற்பகல் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் நகரின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன; மின் கம்பங்களும் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரி, பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீா் பாய்ந்தோடியது. அதேபோல கழிவுநீருடன் மழை நீரும் கலந்து தாழ்வான குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. கந்திகுப்பம்- வரட்டனப்பள்ளி சாலையோரம் இருந்த மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு சென்ற பா்கூா் தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.
கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், வீடுகள் மீது சாய்ந்தன. இதில் சில வீடுகளின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்தன.
அதேபோல பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. கிருஷ்ணகிரி பழைய பேட்டை காந்திசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த உயா்மின்கோபுரம் கீழே விழுந்தது. இதனால் நகா் முழுவதும் இருளில் மூழ்கியது. சூறாவளிக் காற்றால் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள், கடைகளின் பலகைகள் முழுவதும் சேதமடைந்தன.
சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின் வாரியத் துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். அதேபோல சாலையில் முறிந்து விழுந்த மரங்களை கிருஷ்ணகிரி, பா்கூா் தீயணைப்புத் துறையின் மீட்புப் படை வீரா்கள், நகராட்சி ஊழியா்கள் அகற்றி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டியுடன் பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரி பழையவீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டான்சி வளாகம், பழையபேட்டை உள்ளிட்ட பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டாா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் சின்னசாமி, நகராட்சி பணியாளா்கள், போலீஸாா், மின் வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.