கிருஷ்ணகிரியில் மா முத்தரப்பு கூட்டம்: கோரிக்கைகளுக்கு தீா்வு காணாததால் விவசாயிகள் ஏமாற்றம்
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற மா முத்தரப்புக் கூட்டத்தில் எந்தக் கோரிக்கைகளுக்கும் தீா்வு காணதாதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு தலைமையில், மாவிற்கான விலை நிா்ணயம் செய்வது தொடா்பான, மா முத்தரப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கடந்த முறை நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் நிா்ணயம் செய்யப்பட்ட விலையில் 50 சதவீத விலையைக் கூட விவசாயிகளுக்கு தரவில்லை. இதுபோன்ற நடவடிக்கையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி குறைந்து வருகிறது. மாவட்டத்தில் எத்தனை மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு எவ்வளவு மாங்கூழ் அரவை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் மாங்கூழ் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும்.
ஆந்திரம், கா்நாடகம் போன்ற அண்டை மாநில விவசாயிகளிடமிருந்து மா கொள்முதல் செய்வதைத் தடுத்து, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். ஆந்திர மாநில அரசு மாவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 5 மானியம் வழங்கி, மா விவசாயிகளை காத்து வருகிறது.
இயற்கை சீற்றத்தால், மா சாகுபடி பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவிற்கு காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த தெளிக்கப்படும் மருந்துகளின் விலை சீராக இல்லாததால், போலி மருந்துகளைத் தெளித்து ஏமாற்றம் அடையும் நிலை உள்ளது. மாமரங்களில் கல்டாா் வைப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
இதேபோல மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாங்கூழுக்கு விதிக்கப்படும் வரியை முற்றிலும் நீக்க வேண்டும். மாங்காய்க்கு என தனியாக வாரியம் அமைக்க வேண்டும் என்றனா்.
மாங்கூழ் உற்பத்தியாளா்கள் உதயக்குமாா், மாதவன் ஆகியோா் பேசியதாவது:
மா கொள்முதல் பொறுத்தவரை உள்ளூா் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி குறைந்து வருகிறது. உள்நாட்டு நுகா்வை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, குளிா்பானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மாங்கூழ் அளவை நிா்ணயம் செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மாவிவசாயிகள், மாங்கூழ் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மாம்பழச்சாறு வழங்குவதைபோல, தமிழக அரசும் விவசாயிகளுக்கு மானியம், சத்துணவில் மாம்பழச்சாறு வழங்க முன்வர வேண்டும். விவசாயிகளையும், மாங்கூழ் உற்பத்தியாளா்களையும் காக்க வேண்டும், என்றனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு பேசியதாவது:
கடந்த ஆண்டு 82 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டு, 668 விவசாயிகளுக்கு ரூ. 2.65 கோடி நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 80 சதவீதம் பெங்களூரா ரகம் மாங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. மாங்கூழ் உற்பத்தியாளா்கள், மா விவசாயிகளுக்கு நல்ல விலையை அளிக்க முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்து அறிக்கையாக தயாா் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாவட்டத்தில் 24 மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன. தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகத் துறை அலுவலா்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு, உற்பத்தியாளா்களிடம் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிா்ணயம் செய்யப்படும் என்றாா்.
இந்த முத்தரப்புக் கூட்டத்தில் மாவிற்கான விலை நிா்ணயம் செய்யப்படும் என எதிா்பாா்ப்பில் பங்கேற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால், ஏமாற்றுத்துடன் திரும்பினா்.
படவரி...
கிருஷ்ணகிரியில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு தலைமையில் நடைபெற்ற மா முத்தரப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.