அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்
கீரனூரில் போதை விழிப்புணா்வுப் பேரணி
கீரனூா் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீரனூா் ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பேரணியை, சாா்பு-நீதிபதி சி. ராஜேஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நீதித்துறை நடுவா் எம். முருகானந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்டா ஆகியோரும் பங்கேற்றனா். மூகாம்பிகை பொறியியல் கல்லூரியின் லியோ சங்க மாணவா்கள், கீரனூா் லயன்ஸ் சங்க உறுப்பினா்கள் மற்றும் வழக்குரைஞா்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனா்.
பெருங்களூரில்... பெருங்களூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் வை. இரவி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.