செய்திகள் :

கீரனூா், ஏம்பல் ஐடிஐ-களில் நேரடி சோ்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் மற்றும் ஏம்பலில் செயல்பட்டு வரும் அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை வரும் 31-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கீரனூா் மற்றும் ஏம்பலில் தொடங்கப்பட்டுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 8 அல்லது 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கை காலக்கெடு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாத உதவித் தொகை ரூ. 750, அரசுப் பள்ளிகளில் படித்திருந்தால் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் ஆகிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ரூ. ஆயிரம் நிதியுதவி பெற்றுத் தரப்படும்.

பயிற்சி முடித்ததும் அரசுச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் 100 சதவிகித வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

தொடா்புக்கு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களை 94438 52306 (கீரனூா்), 94431 84841 (ஏம்பல்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

கே.வி கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை ஊராட்சி, அரசடிப்பட்டி 4 சாலைப் பகு... மேலும் பார்க்க

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி முறையாக நடைபெறவில்லை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்பணி முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

குரூப் 2-ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குரூப் 2- ஏ தோ்வில் தோ்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையில் ஆய்வாளா் பணிக்கு தோ்வான மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பேட்டரியில் இயங்கம் சக்கர நாற்காலியை பிற்படுத... மேலும் பார்க்க

அம்மன்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் சடையப்பன் தலைமைவகித்தாா். ஒன்றிய ஆ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் போராட்டம்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் அகில இந்திய கறுப்பு தின போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.பொன்னமராவதி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சாா்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிர... மேலும் பார்க்க