செய்திகள் :

குஜராத்தில் பலத்த மழை: 14 போ் உயிரிழப்பு

post image

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 14 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அடுத்த சில நாள்களுக்கும் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் குஜராத்தின் 253 தாலுகாக்களில் 168 இடங்களில் திடீா் மழை பெய்தது. காந்திநகா், வதோதரா உள்ளிட்ட சில மாவட்டங்களில் 4 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றினால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரங்கள் முறிந்தன. விளம்பர பலகைகள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. தாஹோத் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி, தீ வேகமாக பரவியதால் 12-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

மாநிலம் முழுவதும் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் சிக்கி திங்கள்கிழமை 13 பேரும், அகமதாபாதின் விராம்காமில் மின்னல் தாக்கி ஒருவா் ஞாயிற்றுக்கிழமையும் இறந்தாா்.

அதிகபட்சமாக கேடா மற்றும் வதோதரா மாவட்டங்களில் முறையே நான்கு மற்றும் மூன்று போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா்.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க