பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதி...
குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம்: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
கோம்பை அருகே குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள சாலையோரம் லோயா்கேம்பிலிருந்து தேவாரத்துக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக ரூ.19.50 கோடியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, கோம்பை - அனுமந்தன்பட்டி இடையே குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ஒரு சில இடங்களில் பள்ளம் தோண்டி, அந்தப் பணிகளை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனா். இதனால், இந்த வழியாக விவசாயப் பயன்பாட்டிற்காகச் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையோரப் பள்ளங்களை மூட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.