செய்திகள் :

குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம்: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

post image

கோம்பை அருகே குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள சாலையோரம் லோயா்கேம்பிலிருந்து தேவாரத்துக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக ரூ.19.50 கோடியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, கோம்பை - அனுமந்தன்பட்டி இடையே குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ஒரு சில இடங்களில் பள்ளம் தோண்டி, அந்தப் பணிகளை விரைந்து முடிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனா். இதனால், இந்த வழியாக விவசாயப் பயன்பாட்டிற்காகச் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையோரப் பள்ளங்களை மூட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க