செய்திகள் :

குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

பல்லடம் அருகே உள்ள திருவள்ளூவா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி திருவள்ளுவா் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 40 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலா் பிரபுசங்கா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது திருவள்ளூவா் நகருக்கு வரும் வழியில் முறைகேடாக தண்ணீா் திருட்டு நடைபெற்று வருகிறது. அதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 40 நாள்களாக அத்திகடவு குடிநீா் வரவில்லை. இதனால் பணம் கொடுத்துதான் தண்ணீரை விலைக்கு வாங்கி அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம். தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க