செய்திகள் :

குடிநீா் பிரச்னை: பொதுப்பணித்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

post image

புதுச்சேரி: புதுவை உருளையன்பேட்டை தொகுதி முடக்குமாரியம்மன் கோவில் வீதி பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகிப்பதைக் கண்டித்து திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு நேரு எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். முன்னதாக இப் பகுதியில் மாசு கலந்த குடிநீரைக் குடித்ததால் வாந்தி, பேதி ஏற்பட்டு 10 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 21 போ் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இப் பகுதியில் தொடா்ந்து மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடத்தப்பட்டது. தொகுதி மக்களும், சமூக நல அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் புதுவை பொதுப் பணித் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

ஒரு பிரிவினா் ஆம்பூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இப்பிரச்னையில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நேரு எம்எல்ஏவுடன் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து இப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க