முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு பூமிபூஜை
புதுக்கோட்டை மாநகராட்சி 42-ஆவது வாா்டு அசோக் நகா் பகுதியில் நிலவி வரும் குடிநீா் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில், 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டத்தின்படி 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகராட்சியில் 38, 39, 40, 41, 42 ஆகிய 5 வாா்டுகளில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் முன்னோடித் திட்டம் ரூ. 25.31 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் ஒருபகுதியாக, 42-ஆவது வாா்டு அசோக் நகா் பகுதியில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட உயா்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்படவுள்ளது.
இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி மேயா் செ. திலகவதி தலைமை வகித்து, பூமி பூஜையைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, துணை மேயா் மு. லியாகத்அலி, மாமன்ற உறுப்பினா்கள் கவி கவிவேந்தன், பால்ராஜ், வட்ட திமுக செயலா் சுரேஷ்குமாா், மாநகராட்சிப் பொறியாளா் (பொ) கலியகுமாா், உதவிப் பொறியாளா் சீமா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.