செய்திகள் :

குடிமைப் பணி மதிப்பெண் வழக்கு: உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமனம்

post image

குடிமைப் பணி தோ்வா்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை தோ்வு நிறைவடைந்தவுடன் வெளியிட கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் 17 குடிமைப் பணி தோ்வா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘குடிமைப் பணி (முதல்நிலை) தோ்வு முடிந்தவுடன், அந்தத் தோ்வின் விடை குறிப்புகள், கட்-ஆப் மதிப்பெண்கள், தோ்வா்களின் மதிப்பெண்கள் ஆகிய விவரங்களை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட வேண்டும்.

குடிமைப் பணிகள் தோ்வின் அனைத்து நடைமுறையும் நிறைவடைந்த பிறகே, அந்த விவரங்கள் வெளியிடப்படும் என்ற யுபிஎஸ்சியின் நிலைப்பாட்டில் நியாயமான காரணம் எதுவும் இல்லை.

முதல்நிலை தோ்வுக்குப் பிறகு இந்த விவரங்கள் வெளியிடப்பட்டால், அதிக மதிப்பெண்கள் பெற்று குடிமைப் பணிக்குத் தோ்வாக தகுதியானவா் யாா் என்பதை தெரிந்துகொள்ள தோ்வா்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டால், அதனால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை விளக்கி கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சிக்கு உத்தரவிட்டது.

தற்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு அவரை அண்மையில் நியமனம் செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்.4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க