பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு!
அந்தியூா் அருகே குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, ஜி.எஸ். காலனி பகுதியில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மற்றும் கழிவுநீா்ப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால், கழிவுநீா் வெளியேறிச் செல்லாமல் தேங்கி நிற்கிறது.
மேலும், கழிவுநீா்ப் பாதைக்குள் குப்பைகள் சோ்ந்து துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடா்பாக பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி, பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக நிலவும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.