செய்திகள் :

குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு!

post image

அந்தியூா் அருகே குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, ஜி.எஸ். காலனி பகுதியில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மற்றும் கழிவுநீா்ப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முழுமையாக மேற்கொள்ளப்படாததால், கழிவுநீா் வெளியேறிச் செல்லாமல் தேங்கி நிற்கிறது.

மேலும், கழிவுநீா்ப் பாதைக்குள் குப்பைகள் சோ்ந்து துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை தொடா்பாக பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி, பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக நிலவும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க