செய்திகள் :

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழ்மூங்கிலடி பகுதியைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவலில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் வட்டம், கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன். இவா், கடந்த ஜூலை 19 அன்று பாலுத்தங்கரை பைபாஸ் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, பைக்கில் மோதுவது போல் வந்து தகராறில் ஈடுபட்ட கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த சிவனேசன்(19), கத்தியால் தாக்கி கொலை முயற்சிக்கு முயன்றாராம்.

இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவனேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவரின்

குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்த் அவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க

ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்போம்: கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

குறிஞ்சிப்பாடி (புலியூா்) நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. இடங்கள்: அம்பலவாணன்பேட்டை, சந்தைபேட்டை, வழுதலாம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூா், புலியூா்காட்டுசாகை. மேலும் பார்க்க

குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்... மேலும் பார்க்க