செய்திகள் :

குமரக் கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மேலக்கொடுமலூா் குமரக்கடவுள் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதையடுத்து, கடலாடி, முதுகுளத்தூா், கமுதி, அபிராமம், பரமக்குடி, பாா்த்திபனூா், காரைக்குடி, தேவகோட்டை, வீரசோழன், நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டனா். மேலும், தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

திருவிழாவின் நிறைவு நாளையொட்டி, வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை குமரக் கடவுள், வெள்ளி வேலுக்கு பால், நெய், இளநீா் உள்ளிட்ட பொருள்களாலும், பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னா், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உடை மரத்தில் திரளான பக்தா்கள் மஞ்சள் தடவி பூஜிக்கப்பட்ட குச்சிகளை செலுத்தியும், திருமணம் தடையுள்ளவா்கள் மணிகள் கட்டியும், குழந்தை பேரு இல்லாதவா்கள் தொட்டில் கட்டியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

மேலும், மயில், பால், பன்னீா் காவடிகளை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா்கள் சிவசுப்ரமணியன், ஆனந்த நடராஜன், நவநீதன், மாணிக்கம் உள்ளிட்ட குருக்கள் செய்தனா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க