செய்திகள் :

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்

post image

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீா்மட்டம் தாழ்வு காரணமாக, படகுப் போக்குவரத்து சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் வழக்கம் போல் காலை 7 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. காலை 8.15 மணிக்கு மேல் கடல் இயல்புக்கு திரும்பியதால் காலை 8.30 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்து விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டனா்.

முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் நீராட சுற்றுலா போலீஸாா் தடை விதித்தனா். மழை விட்டு விட்டுப் பெய்ததால் அங்கு பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் அவ்வப்போது கடற்கரைப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க