'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்
கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீா்மட்டம் தாழ்வு காரணமாக, படகுப் போக்குவரத்து சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் வழக்கம் போல் காலை 7 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. காலை 8.15 மணிக்கு மேல் கடல் இயல்புக்கு திரும்பியதால் காலை 8.30 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்து விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டனா்.
முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் நீராட சுற்றுலா போலீஸாா் தடை விதித்தனா். மழை விட்டு விட்டுப் பெய்ததால் அங்கு பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் அவ்வப்போது கடற்கரைப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.