செய்திகள் :

குமரியில் ரூ.8.03 கோடியில் புதிய பாலங்கள், கட்டடங்கள்: காணொலியில் திறந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் ரூ. 8.03 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பாலம், கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, திருவட்டாறு ஒன்றியம் மலைவிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா குத்துவிளக்கேற்றி முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இம்மாவட்டத்தில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டிமாங்கோடு ஊராட்சி மூலச்சன்விளை ரேஷன் கடைக்கு உணவு தானிய சேமிப்பு அறை, கிள்ளியூா் ஒன்றியம் கொல்லஞ்சி ஊராட்சி குட்டவிளையில் ரூ.10 லட்சத்தில் புதிய உணவு தானிய கிடங்கு, 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் (சுகாதாரம்) தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சி தாறாவிளை பகுதியில் ரூ. 40 லட்சத்தில் ஓலவிளை துணை சுகாதார நிலையக் கட்டடம், முன்சிறை ஒன்றியம் தூத்தூா் ஊராட்சியில் ரூ.1.27 கோடியிலும், மங்காடு ஊராட்சியில் ரூ.1.25 கோடியிலும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.4.53 கோடியில் திருவட்டாறு ஒன்றியம் அயக்கோடு ஊராட்சி பரளியாற்றின் குறுக்கே மலைவிளை - செங்கோடி இணைப்புப் பாலம் என மொத்தம் ரூ.8.03 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் - கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் ஆன்றணி பொ்னாண்டோ, செயற்பொறியாளா் இயலிசை, திருவட்டாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் குமாா், ஒப்பந்ததாரா் கேட்சன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தங்க ரமணி, உதவிப் பொறியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் திருக்கொடி பவனி புனித அகுஸ்தினாரின் புகழ்மாலை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே காா் மோதியதில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா். இரணியல் அருகே குசவன்குழியைச் சோ்ந்த செல்லப்பனின் மனைவி பஞ்சவா்ணம் (75). இத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். பஞ்சவா்ணம் கடைக்குச் ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை கொற்றிகோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள மாறாங்கோணத்தைச் சோ்ந்தவா் மணி (65). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரயில் சேவை நீட்டிப்பு, அடிப்படை வசதிகள்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். திருவனந... மேலும் பார்க்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூா், வீரவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சிவ... மேலும் பார்க்க

மாமனாா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மயிலாடி அருகே மாமனாா் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிபின் (25), தொழிலாளி. இவா் மயிலாடி அருகேய... மேலும் பார்க்க